செய்திகள்

டெல்லியில் ஆளுநர் அதிகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு

டெல்லி, மே 20–

டெல்லி அரசில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில், மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கும் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்த நிலையில், அதை தீர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கே, ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் என்று, அண்மையில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. மக்களாட்சி முறையில், நிர்வாகத்தின் உண்மையான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றம், மாநில அரசுகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது.

மீண்டும் வழக்கு

இந்நிலையில், டெல்லி அரசில் நிர்வாக அதிகாரங்களை துணை நிலை ஆளுநருக்கு வழங்கி இந்திய ஒன்றிய அரசு நேற்று அவசர சட்டம் கொண்டு வந்தது. இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில், ஒன்றிய அரசு நேற்று அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, டெல்லி அரசில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் துணை ஆளுநருக்கு வழங்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய நிலையில், இந்த அவசர சட்டத்தின்படி டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி, இது மக்களாட்சியை கொலை செய்யும் செயல் என்றும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் குற்றம் சாட்டி இருந்தது.

இச்சூழலில், மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, ஒன்றிய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதனால், டெல்லி அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் விவகாரம் மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கே சென்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *