செய்திகள்

டில்லி திரும்பினார் பிரதமர் மோடி: காஷ்மீர் தாக்குதல் குறித்து முக்கிய ஆலோசனை

Makkal Kural Official

புதுடெல்லி, ஏப்.23–

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக, சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அவசரமாக இன்று காலை டெல்லி திரும்பினார்.

தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார். நேற்று சென்ற அவர், பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு டெல்லி திரும்புவதாக இருந்தது. ஆனால் காஷ்மீரின் பெஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி தனது சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவு சவுதியில் இருந்து கிளம்பினார். இன்று காலை பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டெல்லி விமான நிலையத்திலேயே இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் உறுதி

மேலும், ‘இக்கொடூர தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பவா்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவாா்கள். அவர்களின் தீய செயல்திட்டம் ஒருபோதும் வெற்றிபெறாது. பயங்கரவாதத்தை எதிா்த்துப் போராடுவதற்கான எங்களின் உறுதி அசைக்க முடியாதது. அது இன்னும் வலுவடையும்’ என்று மோடி கண்டனத்தை பதிவிட்டிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *