செய்திகள்

டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில்: முதல் சோதனை ஓட்டம் வெற்றி

Makkal Kural Official

சென்னை, மார்ச் 21–

சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டத்தில் இயக்கப்பட உள்ள டிரைவர் இல்லா மெட்ரோ ரெயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென தலா 3 ரெயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, டிரைவர் இல்லாத ரெயிலின் சோதனை ஓட்டத்தை மெட்ரோ ரெயில் நிறுவனம் துவங்கி உள்ளது.

பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் வரை சோதனை ஓட்டத்தை துவங்கி உள்ளது. டிரைவர் இல்லாமல் இயக்கப்பட்ட இந்த மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. 3 கி.மீ., தூரம் 25 கி.மீ., வேகத்தில் டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *