வாடிகன், மே 18–
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை புதிய போப்பாக தேர்வாகி உள்ள லியோ XIV, கடுமையாக விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவரது உத்தரவுகள் உலக நாடுகளை அச்சமடைய செய்து வருகிறது. சட்டவிரோத குடியேற்றம் முதல் பரஸ்பர வரி விதிப்பு வரை பல அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.
அமெரிக்காவுக்கு எதிராக சீனா போன்ற ஒரு சில நாடுகள் தான் கேள்வி கேட்பதுடன் எதிர் நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை புதிய போப்பாக தேர்வாகி உள்ள, லியோ XIV விமர்சித்துள்ளார். டிரம்பை விமர்சித்த முதல் போப் இவர் ஆவார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கையை புதிய போப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாடிகனில் நடைபெற்ற தூதர்கள் சந்திப்பில், உலகம் முழுவதிலுமிருந்து வந்த 185 நாடுகளின் தூதர்களிடம் பேசிய போப் லியோ XIV, அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையை கடுமையாக விமர்சித்தார். டிரம்பின் நிர்வாகம் நடத்திய குற்றச்சாட்டு இல்லாத குடியிருப்பாளர்களைத் துரத்தும் நடவடிக்கைகள் குறித்து பேசிய போப், இது மனித மரியாதையை கேள்விக்குள்ளாக்கும் செயல் எனக் கண்டனம் தெரிவித்தார்.
கனிவுடன் அணுக வேண்டும்
அமெரிக்காவில் பிறந்த முதல் போப்பான லியோ XIV, தனது சொந்த குடும்பமும் குடியேறியவர்களாக இருந்ததாலேயே, ஆழமாக புரிந்துகொள்ள முடிகிறது எனக் குறிப்பிட்டார். “குடியேறிகள் அழிவு வாழ்விலிருந்து மீள புதிய வாழ்க்கையை தேடி வருகிறார்கள். அவர்களை இழிவாக பார்க்கக்கூடாது; மரியாதையுடனும் கனிவுடனும் அணுக வேண்டும்,” என்றார்.
மேலும் பேசுகையில், “உலகம் முழுவதும் நடக்கும் ஆயுத வர்த்தகம், மதச்சுதந்திரம், சமாதானம் ஆகியவற்றையும் சிறப்பாக பேசினார். ஆயுதங்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும், மாற்றாக அமைதிக்கான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இரும்புக் கோபுரங்களை உயர்த்துவது முக்கியமல்ல; மனித உறவுகளை உயர்த்துவதே அடிப்படை என்பதை அவர் கூறினார். “குடியேற்றம் என்பது ஒரு சுமையல்ல. அது நம்மை மனிதர்களாக மாற்றும் ஒரு வாய்ப்பு” என்று கூறிய போப்பின் வார்த்தைகள், அரசியல் தலைவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
![]()





