செய்திகள்

ஜெர்மனி நாட்டில் பணிபுரிய செவிலியர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.2 லட்சத்தில் வேலைவாய்ப்பு

Makkal Kural Official

15–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, மார்ச் 4–

ஜெர்மனி நாட்டில் பணிபுரிய செவிலியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு, விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு 6 மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்கு உட்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண் பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு பி1, பி2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாதச் சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும்.

எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15–ந் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044- 22505886/ 63791 79200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *