சென்னை, மார்ச்.21-–
சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பிரவேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஐ.ஜி.க்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
* நரேந்திரன் நாயர் –- சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பணியாற்றி வரும் இவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் செயல்படும் விரிவாக்க பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.
* லட்சுமி- – விரிவாக்க பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் இவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* பிரவேஷ் குமார் –- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் இவர் சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பொறுப்பேற்பார்.
இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.