சென்னை, ஜன.25–
சென்னை மெரினா கடற்கரை அண்ணா சதுக்கத்தில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களுக்கு இன்று முதல் நாளை காலை வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
குடியாசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26–ம் நாள் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும்.
தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு தமிழ்நாடு கவர்னர் மற்றும் முதலமைச்சர் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது.
எனவே, பாதுகாப்பு காரணங்களால் 25.1.2023 முதல் 26.1.2023 முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அரசு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.