சென்னை, பிப். 26-
சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் 2 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் மூலம் தினந்தோறும் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் 2 நாட்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாநகராட்சியின் இணையவழி சேவைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, வரும் 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் மார்ச் மாதம் 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி வரை சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.