சென்னை, மார்ச் 6–
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி மதிப்பிலான இ–சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் கொண்டுவரப்பட்ட 3 கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை துறைமுகத்தில் வெளிநாட்டு பொருட்கள் சட்ட விரோதமாக கடத்தி வரப்படுவதாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் துறைமுகத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ரூ.18.2 கோடி மதிப்பிலான இ–சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள், காலணிகள், பொம்மைகள், சீன பட்டாசுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 5 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.