செய்திகள்

சென்னை சர்வதேச திரைப்பட விழா

Makkal Kural Official

சென்னை, டிச.10-–

சென்னையில் நடைபெறும் 22-–வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.85 லட்சத்திற்கான நிதியுதவியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். முதலமைச்சரின் ஆணையின்படி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தலைமைச் செயலகத்தில் 12–ந் தேதி முதல் 19–ந் தேதி வரை சென்னையில் நடைபெறும் 22-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 85 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு ரூ. 75 லட்சம் நிதயுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சரின் ஆணையின்படி, 2023–ம் ஆண்டு ரூ.85 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் 12–ந் தேதி முதல் 19–ந் தேதி வரை சென்னையில் நடைபெறும் 22-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.85 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் சாமிநாதன், சென்னை சர்வதேசத் திரைப்பட விழா இயக்குனர் ஏ.வி.எம்.சண்முகத்திடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கூடுதல் இயக்குனர் மு.பா.அன்புச்சோழன், கூடுதல் இயக்குனர் எஸ்.செல்வராஜ், இந்திய திரைப்பட திறனாய்வுக் கழக தலைவர் சிவன் கண்ணன், துணைத்தலைவர் ஆனந்த் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *