செய்திகள்

சென்னையில் 440 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

Makkal Kural Official

சென்னை, ஜன. 13–

புனித தோமையர் மலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் குழுவினர் ஆலந்தூர், இன்னர் ரிங் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி விசாரணை செய்த போது காரில் வந்த 2 நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

மேலும் காரை சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன்பேரில், புனித தோமையர் மலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த சம்சுதீன் (34), ராஜஸ்தானைச் சேர்ந்த பீரு ஷாஹா (26), ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 440.08 கிலோ கிராம் எடை கொண்ட குட்கா புகையிலை பொருட்கள், 4 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *