சென்னை, ஜன.25-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் 29–ந்தேதி நடைபெறுகிறது.
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 29.1.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும்.
அதுபோது, தி.மு.க. மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில், மத்திய அரசின் 2023–2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.