செய்திகள்

சென்னையில் விடிய விடிய மழை: விமான சேவை பாதிப்பு

Makkal Kural Official

சென்னை, ஜூலை 13–

சென்னையில் விடிய விடிய பெய்த மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.

சென்னையில் நேற்ற காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இரவு 8 மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. சென்னையில் மழை இரவு முழுவதும் நீடித்தது. இந்நிலையில், சென்னையில் இரவில் பெய்த கனமழையால் விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 15 விமானங்கள், தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து வருகின்றன. சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன.சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 16 விமானங்கள் வானிலை காரணமாக பல மணி நேரமாக தாமதமாகி வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *