செய்திகள்

சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க ரூ.4,058 கோடியில் ஒப்பந்தம்

சென்னை, செப்.14-

சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க ரூ.4 ஆயிரத்து 58 கோடியே 20 லட்சம் மதிப்பில் 3 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

சென்னையில் 2-ம் கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. இதில், 3 பிரிவுகளில் சுரங்கத்தில் ரெயில் நிலையங்கள் அமைப்பதற்காக ரெயில் விகாஸ் நிகாம் நிறுவனத்திற்கு ரூ.1,730.60 கோடி, ரூ.1,461.97 மற்றும் ரூ.865.63 கோடி என ரூ.4 ஆயிரத்து 58 கோடியே 20 லட்சம் மதிப்பில் 3 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜைக்கா) நிதியுதவியின் ஒரு பகுதியாகும். இதற்கான ஏற்பு கடிதம் ரெயில் விகாஸ் நிகாம் நிறுவனத்திற்கு கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த 3 ஒப்பந்தங்களும் கீழ்ப்பாக்கம் மெட்ரோவில் இருந்து தரமணி வரை 12 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கான அனைத்து வகையான பணிகள் மற்றும் 4 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களின் சுற்றுச்சுவர் தவிர மற்ற கட்டுமான பணிகளை உள்ளடக்கியதாகும்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் தலைமையில், இயக்குனர் தி.அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் ரெயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் தலைமை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில், தலைமை பொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), பொது மேலாளர் ரவிச்சந்திரன் (சுரங்கப்பாதை), கூடுதல் பொது மேலாளர் டி.குருநாத் ரெட்டி, (ஒப்பந்த கொள்முதல்) மற்றும் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *