செய்திகள்

சென்னையில் பயணிகள் வசதிக்காக இன்று முதல் 4 புதிய மின்சார ரெயில் சேவை

Makkal Kural Official

சென்னை, மார்ச் 3–

பயணிகள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் – ஆவடி மின்சார ரெயில் சேவை உள்பட 4 மின்சார ரெயில் சேவைகள் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை ரெயில்வே கோட்டத்தில், சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, கடற்கரை – வேளச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 650 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இந்த ரெயில்களில் 10 லட்சம் பயணிகள் தினசரி பயணிக்கின்றனர். இந்த வழித்தடங்களில் பயணிகள் தேவை அடிப்படையில், அவ்வப்போது புதிய மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதன்படி தற்போது 4 புதிய மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு முற்பகல் 11.15 மணிக்கு ஒரு மின்சார ரெயில் (43013), ஆவடியில் இருந்து சென்ட்ரலுக்கு அதிகாலை 5.25 மணிக்கு ஒரு மின்சார ரெயில் (43006), சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே இரவு 10.35 மணிக்கு ஒரு மின்சார ரெயில் (42035), கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் இடையே காலை 9.10 மணிக்கு ஒரு ரெயில் (42014) ஆகிய 4 புதிய மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரெயில்களின் சேவைகள் இன்று முதல் அமுலுக்கு வந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *