சென்னை, ஜன. 26–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்று ரூ.280 உயர்ந்து 43 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இந்நிலையில், ஜனவரி 26-ம் தேதி காலை நிலவரப்படி 43 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சவரனுக்கு ரூ.280 உயர்வு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,380 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.75.00 ஆகவும், ஒரு கிலோ ரூ.1000 உயர்ந்து ரூ.75,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.