சென்னை, மே.30-
சென்னை மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
தமிழ்நாட்டில் நேற்று 5 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 3 பேருக்கும், கிருஷ்ணகிரியில் ஒருவரும், கோவையில் ஒருவர் உள்பட மொத்தம் 3 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 7 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 79-ஆக உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் இல்லை.
மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.