செய்திகள்

சென்னையில் ஒருவருக்கு கொரோனா

சென்னை, செப்.14-–

தமிழ்நாட்டில் நேற்று 335 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று சென்னையை சேர்ந்த ஒரு ஆணுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இத்தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *