செய்திகள்

சீரகத்தின் மருத்துவ பயன்கள்!

Makkal Kural Official

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்‘ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரகநீர்.

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத்தொல்லை நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒரு நாள் ஊற வைத்துக்கொள்ளவும். இதை தினம் இரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டுவர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

எனவே, வாரம்ஒருமுறதடுப்புமுறையாகக்கூட(Prophylactive) இதைச்சாப்பிடலாம்.

* உடலுக்குகுளிர்ச்சியும், தேகத்தைப்பளபளப்பாகவைக்கும்ஆற்றலும்சீரகத்திற்குஉண்டு. எனவே, தினம்உணவில்சீரகத்தைஏதாவதுஒருவழியில்சேர்த்துக்கொள்வோம்.

* திராட்சைப்பழச்சாறுடன், சிறிதுசீரகத்தைப்பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலைஇரத்தஅழுத்தநோய்குணமாகும். மத்தியதரஇரத்தஅழுத்தநோய்இருப்பவர்களுக்கு, மேலும்இரத்தஅழுத்தம்அதிகரிக்காதுதடுக்கும்.

* சிறிதுசீரகம், நல்லமிளகுபொடித்துஎண்ணெயிலிட்டுக்காய்ச்சி, அந்தஎண்ணெயத்தலையில்தேய்த்துக்குளித்தால், கண்எரிச்சல், கண்ணிலிருந்துநீர்வடிதல்நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம்சேர்த்துகஷாயம்செய்துஅத்துடன்கருப்பட்டிபொடித்திட்டுசாப்பிட்டால், மனஅழுத்தம்மாறும். ஆரம்பநிலமனநோய்குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால், உடல்அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்றுதின்று, ஒருடம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும் திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர்விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப்பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். நாம் சமையலறையில் ஒரு மருத்துவமனையை வைத்துக்கொண்டு நாம் ஏன் வீட்டைவிட்டு தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்றுதான் தெரியவில்லை.

சீரகம் நமக்கு எளிதாக கிடைக்க‍க் கூடியபொருள். வாழைப்பழம், எந்தப் பருவ காலத்திலும் கிடைக்க‍க் கூடிய எளியபழம்.

இந்த இரண்டையும் கலந்து சாப்பிட்டால், என்ன‍ மாதிரியான நோய்குணமாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மஞ்சள் வாழைப் பழத்தின் மேல் தோலை உரித்து அப்பழத்துடன் கொஞ்சம் சீரகத்தை சேர்த்து நன்றாக பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்தமூலம் முற்றிலும் குணமாகும்.

மேலும் உடலில் இருக்கும் தேவையற்ற‍ கெட்ட‍ கொழுப்புக்க‍ள் கரைந்து உடல்எடை குறைந்து ஆரோக்கியம் மேலோங்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *