செய்திகள்

சிங்கப்பூர் பள்ளி தீ விபத்தில் உயிர்தப்பிய மகன், திருப்பதியில் பவன் கல்யாணின் மனைவி மொட்டை அடித்து வேண்டுதல்

Makkal Kural Official

திருமலை, ஏப். 14–

சிங்கப்பூர் பள்ளியில் நடந்த தீ விபத்தில் இருந்து மகன் உயிர் தப்பிய நிலையில், திருப்பதியில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மனைவி லெஸ்னேவா மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவு செய்தார்.

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணின் 3வது மனைவி அன்னா லெஸ்னேவா. இவர்களுக்கு பொலெனா அஞ்சனா பவனோவா என்ற மகளும், மார்க் சங்கர் என்ற மகனும் உள்ளனர்.

2013ல் இருவருக்கும் திருமணம் நடந்தது முதல் ஐதராபாத்தில் தான் வசித்து வந்தனர். கடந்த வருடம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்ற பின்னர், தனது குடும்பத்தினரை சிங்கப்பூருக்கு அனுப்பிவிட்டார். அங்குள்ள பள்ளிகளில் அவரது குழந்தைகள் படித்து வந்தனர்.

கடந்த வாரம் சிங்கப்பூர் பள்ளியில் நடந்த தீ விபத்தில் பவன் கல்யாணின் மகன் மகன் மார்ச் சங்கர் காயமடைந்தார். சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பினார். இதனையடுத்து பவன் கல்யாண் தனது குடும்பத்தாருடன் ஐதராபாத் திரும்பினார்.

தீவிபத்தில் இருந்து மகன் உயிர் பிழைத்ததற்காக, திருப்பதியில் முடி காணிக்கை கொடுப்பதாக பவன் கல்யாணின் மனைவி லெஸ்னேவா வேண்டிக் கொண்டார்.

இதற்காக நேற்று திருப்பதி சென்ற அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். லெஜினோவா கிறிஸ்தவர் என்பதால் அதற்கான படிவத்தில் கையெழுத்து பெற்றனர். பிறகு மொட்டை அடித்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார். விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு தங்கிய அவர் வி.ஐ.பி. தரிசனத்தின் மூலம் இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *