பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி தகவல்
பாட்னா, டிச. 1–
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு டிசம்பர் 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக, அவரது மகனும் பீகார் மாநில துணை முதல்வருமனா தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, சிங்கப்பூரில் வசிக்கும் அவரது மகள் அவருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன் வந்துள்ளார்.
தேஜஸ்வி தகவல்
இதையடுத்து, லாலு பிரசாத் சிங்கபூரில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்குள்ள பிரபல மருத்துவமனையில், டிசம்பர் 5-ந்தேதி லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக, அவரது மகனும், மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி தெரிவித்து உள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள குரானி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டபோது, இந்த தகவலை தேஜஸ்வி தெரிவித்தார்.