செய்திகள்

சமூகநீதியின் அடையாளம் பி.பீ.மண்டல்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை, ஏப்.13–

இன்று பி.பீ.மண்டல் நினைவு தினம். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–

‘மக்கள்தொகையில் பெரும்பான்மையாக இருந்தாலும் பெரிதும் உரிய பிரதிநிதித்துவமின்றி இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நலன்களுக்கான தனது அயராத முயற்சிகளால் சமூகநீதிக்கான அடையாளமாகவே தன் பெயரை நிலைநிறுத்திக் கொண்டவர் பி.பீ.மண்டல்.

அவரது அறிக்கையின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றப் பாடுபடுவதே அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும்’.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *