அறிவியல் அறிவோம்
சந்திராயன் 2 திட்டத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் பங்களித்தவர் ரிது கரிதால். ‘இந்தியாவின் ராக்கெட் பெண்மணி’ என்றழைக்கப்படும் ரிது கரிதால் 2007-ம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்தார். மங்கல்யான் திட்டத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.
விண்வெளிப் பொறியாளரான இவர் லக்னோவில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். லக்னோ பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி. இயற்பியல் படித்தார். இந்திய அறிவியல் நிறுவனத்தில் விண்வெளிப் பொறியியல் பட்டம் பெற்றார்.
2007-ம் ஆண்டு மறைந்த குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமிடம் இருந்து இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி விருதைப் பெற்றார்..