செய்திகள்

சட்டவிரோத பண மோசடி : கேரள முதல்வர் மகள் மீது மோசடி வழக்கு;

Makkal Kural Official

திருவனந்தபுரம், ஏப் 4–

‘கொச்சி மினரல்ஸ்’ வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன். இவரது தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயனின் மகள் வீணா. இவர், பெங்களூரை தலைமையிடமாக வைத்து, ‘எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் கணக்குகளை வருமான வரித்துறை பரிசோதித்ததில், ‘கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூடைல்’ எனும் நிறுவனம் வினாடிக்கு 1.72 கோடி ரூபாய் செலுத்தி இருப்பதை கண்டுபிடித்தது. எக்சாலாஜிக் நிறுவனம் அதற்காக எந்த சேவையையும் கொச்சின் மினரல்சுக்கு வழங்கவில்லை எனவும் தெரிவித்தது.

இதையடுத்து, மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத் துறையின் விசாரணைப் பிரிவான, தீவிர மோசடி விசாரணை அலுவலகம், எக்சாலாஜிக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத் துறையில் புகார் அளித்தது. புகாரை ஏற்ற அமலாக்கத்துறை, எக்சாலாஜிக் நிறுவனம், அதன் நிர்வாகியான வீணா மற்றும் பலர் மீது சட்டவிரோத பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், கொச்சி மினரல்ஸ் வழக்கில் வீணா மீது வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் 25 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வீணாவும், அவரது நிறுவனமும், ரூ.2.73 கோடி வரை சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *