செய்திகள்

சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் அமெரிக்கா – கொலம்பியா கடும் மோதல்

Makkal Kural Official

நியூயார்க், ஜன. 28–

சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் கொலம்பியா இடையே மோதல் உச்சம் அடைந்துள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று உள்ளார். இதற்கு முக்கிய காரணம், அதிபர் தேர்தல் களத்தில், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்று கோஷத்தை எழுப்பி டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்தார். மேலும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உள்பட மற்ற நாட்டினர் பலரையும் நாடு கடத்த உள்ளதாக கூறினார். அவரது இந்த பேச்சுக்கு அமெரிக்கர்கள் இடையில் ஆதரவு பெற்று அதுவே டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு வழி வகுத்தது.

இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் மற்ற நாட்டினரை வெளியேற்றும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். அதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப தொடங்கி உள்ளார். கொலம்பியாவை சேர்ந்த பலரையும் விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது. ஆனால் கொலம்பிய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக கொலம்பிய அரசு மீது அமெரிக்கா வரி விதிப்பை தீட்டி உள்ளது.

கொலம்பியாவுடன் மோதல்

மேலும் கொலம்பியாவை சேர்ந்தவர்களுக்கான விசாக்களை ரத்து செய்ததுடன் அமெரிக்காவுக்கு அந்நாட்டு பயணிகள் வர தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக கொலம்பியாவும், அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்து உள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் கொலம்பியா இடையே மோதல் உச்சம் அடைந்துள்ளது.

இதற்கிடையே சட்டவிரோத குடியேற்ற விவகாரம் உலக நாடுகள் இடையே பதற்றமான சூழலை உருவாக்கி வருகிறது. அதேபோல் அமெரிக்காவில் அதிகளவு சட்டவிரோதமாக குடியேறுபவர்களில் இந்தியர்களும் பெரும் பங்கு வகிப்பதாக அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கூட இந்தியர்கள் பலர், சொந்த நாட்டிற்கு வராமல் இருந்தனர். இதற்கு காரணம் டொனால்ட் டிரம்ப் கூறிய வார்த்தைகள் தான் ஆகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *