சென்னை, ஜூன் 24–-
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வருகிறது. அந்த வகையில், நேற்று கோவையில் மட்டும் ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 37 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்த தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.