4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
திருவனந்தபுரம், ஜூன் 30–
கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கேரளாவில் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து அடுத்த 3 நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு ஆலப்புழா, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இந்த மாவட்டங்களில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.