செய்திகள் நாடும் நடப்பும்

காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் வீரமரணம்

Makkal Kural Official

ஸ்ரீநகர், ஏப் 24–

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு, இன்று காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர். இதில், ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

‘‘பயங்கரவாதிகளுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள துடு-பசந்த்கர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

உடனே பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.இதையடுத்து பசந்த்ஃகர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை தேடியபோது துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த ஒயிட் நைட் கார்ப்ஸ் படை வீரர் வீர மரணமடைந்தார். படுகாயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும் உயிரிழந்து விட்டார் என்று ராணுவம் அறிவித்துள்ளது. தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது’’.

நேற்று 2 பயங்கரவாதிகள்

சுட்டுக் கொலை

பரமுல்லா மாவட்டத்தில் ஊர் நல்லாஸ் சார்ஜீவன் பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பெருமளவுக்குக் கைப்பற்றப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *