செய்திகள்

காவல்துறையின் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையால்

Makkal Kural Official

சென்னையில் சாலை விபத்து உயிர் இழப்புகள் 14% குறைந்துள்ளது

சென்னை, ஏப். 28–

சென்னை பெருநகரில் சாலை விபத்து உயிர் இழப்புகள் 14% குறைந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர், சென்னை பெருநகரம் முழுவதும் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு போக்குவரத்து அமலாக்க பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகள், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்துவதன் மூலம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வை தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வை தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர். சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினருக்கு, நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து, விபத்துக்களைக் குறைப்பதற்கான தொழில் நுட்பங்கள் குறித்து முறையான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர். விழிப்புணர்வு பிரச்சாரங்களுடன் கூடுதலாக அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் பதிவு செய்து போக்குவரத்து அமலாக்க உத்தியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் சாலை நிலவரங்கள், அறிவிப்பு பலகைகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் போன்றவற்றை மேம்படுத்தியதன் மூலம் விபத்து ஏற்படக்கூடிய இடங்களை எளிதில் அடையாளம் கண்டறிய உதவுகிறது. இந்த கூட்டு முயற்சிகள் மூலம் சென்னை பெருநகரில் கடந்த ஆண்டை விட விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைத்துள்ளன. கடந்த 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 25.04.2025 நிலவரப்படி 2025 ஆம் ஆண்டில் இறப்புகள் 14% குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 25.04.2024 வரை 173 உயிரிழப்புகள் நடந்துள்ளது. இந்தாண்டு இது வரை 149 உயிரிழப்புகள் நடந்துள்ளது.

சென்னையில் விபத்துகளைக் குறைப்பதற்கும், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முன்னுரிமை வழங்கி, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் பணி தொடரும் என்று சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *