செய்திகள்

கால்பந்து போட்டி: மெட்ரோ ரெயில் இலவச பயணம்

Makkal Kural Official

சென்னை, மார்ச் 29–

சென்ட்ரல் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நாளை பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கும் இந்தியன் லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையில் கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கால்பந்தாட்ட (Football Plus Professional Soccer Academy) நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.

கால்பந்து போட்டிக்கான பயணச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ பயணம் வழங்கப்படும். இதை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திற்கும் சென்று திரும்ப முடியும்.

கால்பந்து போட்டிக்கு வருபவர்கள் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகையை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி நாளை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *