செய்திகள்

கனிமொழி எம்பியின் பெயரை தவறாக பயன்படுத்தினேன்: வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கோரிய போதைஇளைஞர்

Makkal Kural Official

கோவை, அக். 03–

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக காணொலி வெளியிட்டு போதை இளைஞர் மன்னிப்புக் கோரி உள்ளனர்.

கோவையில் 1 ந்தேதி இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மது போதையில் பிடிபட்ட இளைஞர் ஒருவர், போக்குவரத்து காவலர்களிடம் நான் கனிமொழி எம்.பி. உதவியாளரின் தம்பி என்று கூறியுள்ளார். இது தொடர்பான காணொலி வெளியாகி வைரலானது. இதனையடுத்து, அந்த இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

தப்பிக்க செய்த தவறு

விசாரணையில், அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக கனிமொழி உதவியாளரின் தம்பி என தவறான தகவலை கூறியது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கனிமொழி எம்.பி பெயரை பொதுவெளியில் தவறாக பயன்படுத்தி காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக காணொலி வெளியிட்டு அந்த இளைஞர்கள் மன்னிப்பு கேட்டு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதில் அந்த இளைஞர் கூறி இருப்பதாவது:–

‘பொள்ளாச்சியிலிருந்து கோவை சென்று திரும்பியபோது, காவல்துறையினர் சோதனையில் பிடிபட்டோம். அப்போது மது போதையில் தவறான வார்த்தைகளை பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பொது இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பெயரை கூறியது தவறு, அவரின் உதவியாளர் யார் என்றே தெரியாது. பொது இடத்தில் தவறாக நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *