செய்திகள்

கனமழை: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Makkal Kural Official

சென்னை, அக். 01–

கனமழையின் காரணமாக, சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க போலீசார் இன்று தடை விதித்துள்ளனர்.

கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பணிகள் குளிக்க கடந்த 27 ந் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது.

அருவிகளில் வெள்ளப்பெருக்கு

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை பெய்ததால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால், விடுமுறை தினத்தை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *