செய்திகள்

கனமழை எச்சரிக்கை- 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்

Makkal Kural Official

சென்னை, பிப். 27–

கனமழை எச்சரிக்கையை அடுத்து, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 3-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதே சமயம், இன்று முதல் வருகிற 1-ந்தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை தொடர்பாக 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது. கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *