செய்திகள்

 ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் சந்திப்பு நிகழ்ச்சி

Makkal Kural Official

சென்னை, அக். 26

1976ம் ஆண்டு தமி­ழக காவல்­து­றையில் காவல் உதவி ஆய்­வா­ளர்­க­ளாக சேர்ந்து சென்­னையில் பணி­பு­ரிந்து, எஸ்பி மற்றும் ஏடி­எஸ்­பிக்­க­ளாக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்­ற முன்­னாள் காவல்துறை அதிகா­ரிகள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்­க­ரையில் நடந்தது. முதலில் ஒரு­வரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசா­ரித்து மகிழ்ந்­­தனர்.

பின்­னர் மயி­லாப்­பூரில் உள்ள தனியார் ஓட்­டலில் விருந்து நிகழ்ச்­சியும் நடைபெற்றது. இந்­நி­கழ்ச்­சியில் சென்னை ஐகோர்ட் நீதி­பதி வள்­ளி­நா­யகம், தமி­ழக காவல்­துறை தென் மண்டல முன்னாள் ஐஜி கேபி சண்­முக ராஜே­ஸ்­வரன் ஆகியோர் சிறப்பு விருந்­­தி­னர்­க­ளாக கலந்து கொண்­டனர்.

இந்த நிகழ்ச்­சியில் 1976ம் ஆண்டு தமிழக காவல்­­து­றையில் எஸ்­ஐக்­க­ளா­க சேர்ந்து சென்னை நகரில் திறம்­பட பணி­யாற்றி ஏடிஎஸ்பி மற்றும் எஸ்­பி­யாக பதவி உயர்ந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகா­ரிகள் டைகர் தயாநிதி (ஏடி­எஸ்­பி), நைனார் முக­மது, நசீர் அக­மது, பட்­டாபி, சேது­ரா­ம­லிங்கம், சந்­தி­ர­பாசு, சுப்­­பையா, வில்­வ­ராணி முருகன், விஜி பன்னீர் செல்வம், ஆலம்­பாடி பன்­னீர், ராஜேந்­திரன், பிவி தாமஸ், கே.கே. ராஜ­ரத்­தினம், சித்­தன்னன் (முன்னாள் அடையாறு துணைக்­க­மி­ஷனர்) , கலி­ய­மூர்த்தி (முன்னாள் திருச்சி எஸ்­பி), மாதவன், குண­சே­கரன், மோகன் உள்­­ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் மலரும் நினை­வு­களை பகிர்ந்து கொண்­டனர்.

மேலும் முன்னாள் ஏடி­எஸ்பி அனுஷ்யா, டிஎஸ்பி ராஜேந்திரன் ஆகி­யோரும் இந்­நி­கழ்ச்சியில் கலந்து கொண்­டு சிறப்­பி­த்­தனர். (இவர்கள் ராஜீவ் காந்தி மனித வெடி­குண்டு வைத்து கொல்­லப்­பட்ட சம்­ப­வத்தில் பந்­தோ­பஸ்து பணியின் போது படுகாய­ம­டைந்­த­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது).

இந்­நி­கழ்ச்­சி­யில் நடந்த மெல்­லிசை நிகழ்ச்­சியில் முன்னாள் ஏடிஎஸ்பி டைகர்­ தயா­நி­தியின் பேத்திகள் பிர­பஞ்­­சனா மற்றும் 4 வயது நிரஞ்­சனா ஆகி­யோர் பாடல்கள் பாடி அசத்­தினர். நிகழ்ச்சி ஏற்­பா­டு­களை ஏடிஎஸ்பி டைகர் தயா­­நிதி செய்­தி­ருந்­தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *