ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தான் ராஜேஷ். ஆட்டோக்கள் ஒன்று ஒன்றாக சவாரி போயிக்கொண்டிருந்தனர். ராஜேஷ் நாம் சென்று டீக்கடை ஓட்டலில் ஆப்பம், வடகறி சாப்பிடலாம் என எண்ணி ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வந்து சவாரி எடுத்தான் ஒரு வாடிக்கையாளர்.
எக்மோருக்கு செல்ல வேண்டுமென ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணி ஓட்ட, வறுமையால் ‘மணி அப்பா, இன்று பள்ளிக்கு பீஸ் கட்ட வேண்டும்’ என சொல்லிக் கொண்டிருந்தான். ‘மகள், அப்பா, எனக்கு யூனிபார்ம் இல்லை, 2 செட்டாவது தைத்தாக வேண்டும் என கேட்டுக் கொண்டேயிருந்தாள்.
பழனி எனக்கு ரசம் சப்பாடு வேண்டாம், கறி சப்பாடு முக்கியமாக மட்டன் குழம்பு வாரத்தில் ஒரு 2 நாளாவது வைக்க ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தான். எந்தப் பயனுமில்லை.
மனைவி ருக்கி, உங்களை கட்டி என்ன பிரயோஜனம்? ஒரு நெக்லஸ் இருக்குதா, என் வீடு பணக்கார வீடு, உங்களால் எங்கப்பா, அம்மா என்ன துரத்திவிட்டு விட்டார்கள். காதலால் நான் நெத்திச்சுட்டி, மாட்டல், கம்மல், மோதிரம், தோடு, பிரேஸ்லெட் என போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது பணம் இருந்தது. ஆனால், இப்போது பணம் இல்லை. மனம் தான் உள்ளது. ‘அந்த மனம் எப்போது, பணம் வருமா? மனம், பணம் என எண்ணி பணத்தால் என் உறவு போயிற்று, மனத்தால் என் உறவு போகுமா உன் அவர் பணம் வருமா? என மனதை விடைத்தான் போல மனக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள்.
ஆட்டோ சென்று எக்மோர் வந்தது. ஆட்டோவிலிருந்து பயணி இருவர் இறங்கி, ராஜேஷ் ‘உள்ளே ஏதாவது இருக்கா பார்த்துக் குடுங்க, பார்த்து இல்லை என பெட்டியை எடுத்துக் கொண்டுச் சென்று விட்டனர். ஆனால் ஒரு பெட்டி அதனுள் லட்சம் மதிக்கத்தக்க ஒரு நெக்லஸ் இருந்தது பார்த்தான். ராஜேஷ் போய் எக்மோர் ஸ்டேஷனில், பயணியை பார்த்து கொடுத்திடலாமா. பிளாட்பார்ம் 3ன்னுத் தானே சொன்னாங்க, வீட்டில் பிள்ளைகள் மனைவி வறுமை. இல்லை இல்லை போலீசில் கொடுத்திடலாமா. இதை விற்று மனைவி பிள்ளைகளின் தேவை பூர்த்தியாகும். இப்படி மனம் ஊஞ்சலாடிக் கொண்டிருக்க, அந்த ஊஞ்சல் நிறுத்தி வண்டி உடனே, அடகு கடைக்கு வந்து விற்றால் தான். மாட்ட மாட்டோம். நகை உருவாக இருக்கக் கூடாது. மாட்டுவோம் போலீசில். நல்ல மனம் ஏன் இப்படி ஆனதோ. அதற்குள் பயணிகள் இருவர் சரியான ஸ்ட்க்ட்டான பேர் வழிகள். ஆட்டோ, நெம்பரை கண்டுபிடித்து போலீசுக்கு போன் செய்ய, போலீஸ் ஆட்டோவை சேஸ் செய்து ஆட்டோ எக்மோர் பக்கத்து ஆல்பட் தியேட்டர், சந்தில் ஒரு பெரிய மார்வாடி கடையில் பத்து வட்டி, திருடியதா, இல்லை என கேட்டு இவன் மனம் நல்லதுமாறி காட்டி, காரணம் வறுமை. பணத்தை எண்ணிக் கொண்டிருக்க போலீஸ் கைது செய்து விட்டது. மனைவி, மக்கள் இவள் தம்பி ஏழுமலை அவரும் வறுமை, அவர் ஏதோ கஞ்சி ஊத்திக் கொண்டிருக்கிறார். விடுதலை ஆனதில் ஓரளவு இந்தக் குடும்பம் மூச்சுவிட முடியும். தன் வினை தன்னைச் சுடும்.