செய்திகள் நாடும் நடப்பும்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 5வது நாளாக அத்துமீறல் :

Makkal Kural Official

இந்திய ராணுவம் தக்க பதிலடி

ஸ்ரீநகர், ஏப். 29–

தொடர்ந்து 5வது நாளாக ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது, பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான், இந்தியா இடையே பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஜம்மு–காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் களம் இறங்கி உள்ளனர்.

சந்தேக நபர்கள் இருக்கும் இடங்களில் பாதுகாப்பு பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களிலும், அக்னூர் செக்டாரிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந் நிலையில் 5வது நாளாக ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, துப்பாக்கியால் சுட்டு இந்தியாவும் பதிலடி கொடுத்துள்ளது. இருப்பினும், எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் நீடிப்பதால் கண்காணிப்பை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தி இருக்கிறது. இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், ‘28–29 நள்ளிரவில் இந்தியா– பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தியது. குப்வாரா மற்றும் பாரமுல்லா மாவட்டப் பகுதிகளிலும் அக்நூர் மண்டலத்திலும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *