சென்னை, ஏப் 17–
மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதியின் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
‘‘மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மதுரை மாநகர் தி.மு.க. செயலாளருமான கோ.தளபதியின் தாயார் மாரியம்மாள் முதுமை காரணமாக மறைவெய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன்.
ஆளாக்கி வளர்த்த அன்பு அன்னையை இழந்து வாடும் தளபதிக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.