சென்னை, மே 20–
உலகக் குத்துச்சண்டை தொடரில் தங்கம் வென்ற நிகத் சரீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–
பெண்களுக்கான உலகக் குத்துச்சண்டை தொடரில் அதிரடியாக ஆடி தங்கம் வென்றுள்ள நிகத் சரீனுக்குப் பாராட்டுகள். இவ்வெற்றிக்கு நீங்கள் முழுதும் தகுதியானவர்.
நிசாமாபாத்தில் இருந்து இஸ்தான்புல் வரையிலான உங்களது வெற்றிக்கதை மேலும் பல பெண்கள் தங்கள் கனவுகளை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தொடர மிகச் சிறந்த ஊக்கச்சக்தியாக விளங்கும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கூறியுள்ளார்.