செய்திகள்

உலகில் முதல்முறையாக சீனாவில் 10ஜி இணைய சேவை அறிமுகம்

Makkal Kural Official

பீஜிங், ஏப். 21–

உலகிலேயே முதல்முறையாக சீனாவில் 10ஜி இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகில் இணைய சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைவரின் கையிலும் தற்போது மொபைல் போன் உள்ளது. அதில் இணைய சேவையும் உள்ளது. மேலும், இது உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் விரிவடைந்து உள்ள நிலையில் பள்ளிகளில் தொடங்கி அனைத்து இடங்களிலும் இணைய சேவை என்பது தற்போது அத்தியாவசியமாகி உள்ளது. அந்த அளவிற்கு இணைய சேவை உலகத்தை ஆக்கிரமித்துள்ளது.

இணைய பயன்பாட்டை பொறுத்தவரை, அதன் வேகம் முக்கியமான ஒன்று. 2ஜி யில் தொடங்கிய இணைய சேவை, 3ஜி, 4ஜி என அதிகரித்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகெங்கும் இப்போது 5ஜி சேவை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் மூலை முடுக்கெல்லாம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

புதிய 10ஜி சேவை அறிமுகம்

இந்நிலையில், ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பகுதி தலைநகர் பீஜிங்கிற்கு அருகில் அமைந்துள்ளது. இது சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

இந்த 10ஜி இணைய சேவையில், பதிவிறக்க வேகம் 9834 Mbps, பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக உள்ளது. இது 50G PON (Passive Optical Network) வேகத்தில் செயல்படும் அதிநவீன தொழில்நுட்பமாகும். உயர் வேக தகவல் பரிமாற்றத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த சேவை மூலம் அதிகமான பயனாளர்கள் ஒரே நேரத்தில் இணைப்புகளை தாமதமின்றி அனுபவிக்க முடியும் என்கிறார்கள். இந்த வளர்ச்சி சீனாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. மேலும் 10ஜி சேவை நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *