செய்திகள்

உத்தரபிரதேசத்தில் லாரி – சரக்கு வாகனம் மோதல் : 8 பேர் பலி

Makkal Kural Official

லக்னோ, மார்ச். 10–

இன்று அதிகாலை லாரியும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெஞ்சை உலுக்கும் இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:–

உத்தரபிரதேசம், சித்தி மாவட்டத்தில் இருந்து பஹ்ரியை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல, மைஹாரை நோக்கி சரக்கு வாகனத்தில் ஒரு குடும்பத்தினர் சென்று கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் லாரியும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 5 பேர் சம்பவ இடத்திலும், 3 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்தவர்கள் யார்–யார் என்று உடனடியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *