செய்திகள்

உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டசபையில் 3–வது இருக்கை

Makkal Kural Official

சென்னை, டிச.9–

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டசபையில் முதல் வரிசையில் 3வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகனுக்கு அடுத்தப்படியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3–வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திருவல்லிக்கேணி–சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று சட்டசபைக்கு வந்த உதயநிதிக்கு, 3-வது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது, அவருக்கு முதல் வரிசையில் 10வது இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், துணை முதல்வராக இருக்கும் அவருக்கு தற்போது சட்டசபையில் முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *