செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளி வழக்குரைஞர் சைகை மொழியில் வாதம்

டெல்லி, செப். 26–

செவித்திறன் மாற்றுத்திறனாளி வழக்குரைஞர், வழக்கு விசாரணையின்போது, சைகை மொழியில் வாதிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, வழக்குலைஞர் சஞ்திதா அய்ன், இரண்டு நாட்கள் முன்பு ஒரு ஆச்சரியமான கோரிக்கையை முன்வைத்தார். அதாவது, செவிதிறன் மாற்றுத்திறனாளி சாராஹ் சன்னி ஆஜராவதால், சைகை மொழியில் வாதிட அனுமதிக்குமாறும், அவர் காணொலி வாயிலாக ஆஜராகி வாதிட அனுமதிக்குமாறும் கோரிக்கை வைத்தார்.

சைகைமொழி வாதம்

உடனடியாக தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், இந்த கோரிக்கைக்கு அனுமதி அளித்து, காணொலி வாயிலாக வாதிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கூறினார். ஆர்வத்துடன் வாதிட முன் வந்த செவிதிறன் மாற்றுத்திறனாளி, சைகை மொழியில் வாதிட்டதை எழுத்துப்பூர்வமாக மொழிபெயர்த்தனர். எப்போதும் வாதங்களால் சப்தங்கள் நிறைந்து காணப்படும் நீதிமன்ற அறை அன்று அமைதிக்கு சாட்சியாகக் காணப்பட்டது. பிறகு, நீதிபதிகளும் எதிர் தரப்பினரும் கூறும் வாதங்கள், சாராஹ் சன்னிக்கு சைகை மொழியில் எடுத்துக்கூறப்பட்டது.

இதனால், வழக்கு விசாரணை தாமதமாகும் என்று நினைத்திருந்தவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. இருவரும் மாறி மாறி மிக விரைவாக வாதங்களை முன்வைத்தது, நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வழக்கு விசாரணையின் வேகம், அபாரமாக இருப்பதாக நீதிபதிகளே கருத்துக் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *