மாஸ்கோ, ஏப். 20–
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாகவும், உக்ரைனும் தங்கள் முன்மாதிரியைப் பின்பற்றும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் இதனை உக்ரைன் சமாளித்து வருகிறது. இதனிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், இரண்டு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
புதின் அறிவிப்பு
இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள ரஷ்ய அதிபர் புதின், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாகவும், உக்ரைனும் தங்கள் முன்மாதிரியைப் பின்பற்றும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரம், போர் நிறுத்த மீறல்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் எதிரிகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்க ரஷ்ய துருப்புகள் தயாராக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.