ஈரோடு, ஜூலை 27–
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உடல்நிலை பாதிப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் என மூன்று பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் (55) புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி சுஜிதா (45) தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டும், மகள் தான்ய லட்சுமி (20) மனநலம் பாதிக்கப்பட்டதால் மூன்று பேரும் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மூன்று பேரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று பேரும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
![]()





