செய்திகள்

இஸ்­லா­மி­ய மக்களின் பாதுகாப்பு, கல்விக்கு தி.மு.க. துணை நிற்கும்: உத­ய­நிதி ஸ்டாலின் உறுதி

Makkal Kural Official

சென்னை, பிப்.1–

இஸ்­லா­மி­ய மக்களின் பாதுகாப்புக்கும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கும் தி.மு.க. என்றென்றும் துணை நிற்கும் என்று துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை ராயப்­பேட்டை புதுக்­கல்­லூ­ரி­யில், `தமிழ்­நாடு இஸ்­லா­மி­யக் கல்வி நிறு­வ­னங்­க­ளுக்­கான கூட்­ட­மைப்பு’ ‘ஓமிட்”–களின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்­சி­களை துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் தொடங்கி வைத்­தார்.

விழா­வில், இக்­கூட்­ட­மைப்­பின் சார்­பில், 12 இஸ்­லா­மிய கல்வி அறி­ஞர்­கள் உட்­பட 13 ஆளு­மை­க­ளுக்கு வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விரு­து­களை வழங்­கி­னார்.

விழாவில் உத­ய­நிதி ஸ்டாலின் பேசியதாவது:-–

1974–இல் தொடங்­கப்­பட்ட இந்த கூட்­ட­மைப்­பில் இன்­றைக்கு கிட்­டத்­தட்ட 520 கல்வி நிறு­வ­னங்­கள் இருப்­பது மிக­வும் பாராட்­டத்­தக்­கது.

கற்­ப­வ­னாக இரு அல்­லது கற்­பிப்­ப­வ­னாக இரு அல்­லது கற்­பிப்­ப­வர்­க­ளுக்கு உதவி செய்­ப­வ­னாக இரு. இந்த மூன்­றை­யும் தவிர நான்­கா­வது நப­ராக கண்­டிப்­பாக இருந்து விடாதே என்­ப­து­தான் நபி­கள் நாய­கம் சொன்ன வார்த்தை. ஒரு முஸ்­லிம் தானும் கல்வி கற்று, பிற­ருக்­கும் கல்வி கற்­றுக் கொடுப்­பதே தான தர்­மங்­க­ளில் சிறந்­த­தா­கும் என்று நபி­கள் நாய­கம் கூறி­யி­ருக்­கி­றார்.

எல்­லோ­ருக்­கும் கல்வி கொடுக்­கப்­படவேண்­டும் என்று நபி­கள் சொன்­னார்­. அதைத்­தான் தி.மு.க.வும் தொடர்ந்து இந்த மண்­ணிலே சொல்லி வரு­கி­றது, செய்து வரு­கி­றது.

தமிழ்­நாட்­டின் கல்­விக்கு கிடைத்த மாபெ­ரும் கொடை­யா­கத் திக­ழும் சிறு­பான்மை கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கு களங்­கம் ஏற்­ப­டுத்த பாசிச கூட்­டம் அவ­தூ­று­க­ளை­யும், வதந்­தி­க­ளை­யும் தொடர்ந்து பரப்பி வரு­கி­றது. இது­போன்ற சவால்­களை எல்­லாம் எதிர்­கொண்­டு­தான் இப்­போ­தும் இந்த சிறு­பான்மை கல்வி நிறு­வ­னங்­கள் தொடர்ந்து சிறப்­பாக கல்வி சேவை­யில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

இப்­போது மாநில அர­சின் அனு­மதி இல்­லா­மல் ஒன்­றிய அரசே பல்­க­லைக் கழ­கங்­க­ளுக்கு துணைவேந்­தர்­களை நிய­மிக்­க­லாம் என்ற ஒரு வரைவை யு.ஜி.சி. மூலம் கொண்­டு­வர திட்­ட­மிட்­டுள்­ளார்­கள். இந்த யு.ஜி.சி. விதி­மு­றை­க­ளுக்கு எதி­ரா­கத் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் முத­ல­மைச்­சர் தீர்­மா­னமே நிறை­வேற்றி இருக்­கி­றார். அது­மட்­டு­மல்ல, வக்பு வாரிய திருத்த மசோ­தா­வை­யும் ஒன்­றிய அரசு கொண்டு வர முயற்­சிக்­கி­றார்­கள்.

பாரா­ளு­மன்ற கூட்­டுக்­கு­ழு­வில் நம் கழ­கக் கூட்­டணி எம்.பி.க்கள் இதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வரு­கி­றார்­கள். அத­னால் கிட்­டத்­தட்ட 10 எம்.பி.க்களை என்ன, ஏது என்று கேட்­கா­மலே பா.ஜ.க ஒன்­றிய அரசு தற்­கா­லிக இடை நீக்­க­மும் செய்து இருக்­கி­றது. ஆனா­லும், முத­ல­மைச்­சர் இஸ்­லா­மிய மக்­களை பாதிக்­கின்ற, அந்த முடிவை உட­ன­டி­யா­கக் கைவிட வேண்­டும் என்று உறு­தி­யோடு செயல்­பட்டு வரு­கி­றார். ஏனென்­றால், கழ­கத்­தின் வர­லாறு அப்­படி.

இஸ்­லா­மிய மக்­க­ளின் பாது­காப்­புக்­கும், உங்­க­ளின் கல்வி மற்­றும் வேலை­வாய்ப்­புக்­கும் கழ­கம் என்­றைக்­கும் துணை நிற்­கும். அய­ராது பாடு­ப­டும். சிறு­பான்மை மக்­கள் நீங்­க­ளும் முத­ல­மைச்­சருக்கு துணை­யாக இருக்க வேண்­டும் என்று உங்­களை கேட்­டுக் கொள்­கி­றேன்.

இவ்­வாறு உதயநிதி ஸ்டாலின் பேசி­னார்.

நிகழ்ச்சிகளை சென்னை பெருமாநகராட்சிமாமன்ற உறுப்பினர் பாத்திமா முசாபர் தொகுத்து வழங்கினார்.

அமைச்­சர் கோவி.செழி­யன், வக்பு வாரி­யத் தலை­வ­ர் நவாஸ் கனி, சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ர் அப்­துல் சமது, இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் தலை­வர் ஆசிம், பொதுச் செய­லா­ளர் அக­மத் மீரான், சென்னை பல்­க­லைக்­க­ழக முன்­னாள் துணை­வேந்­தர் சாதிக், மியாசி அமைப்­பின் தலை­வர் இம்­தி­யாஸ் பாஷா, செய­லா­ளர் இலி­யாஸ் சேக், ஆற்­காடு நவாப் அப்­துல் அலி, உள்­பட பல­ர் கலந்து கொண்­ட­னர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *