நல்வாழ்வு
இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இளம் வயதிலேயே நரை முடி ,முடி உதிர்வது மற்றும் முடியின் அடர்த்தியானது குறைவது போன்ற பிரச்சனைகளினால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தேங்காயில் புரதம் மற்றும் செலீனியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப் பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது.
முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது தேங்காய். மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து, பளபளப்பான, அடர்த்தியான, கருப்பு நிறம் கொண்ட முடியை தேங்காய் தரும்.
தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினாலும் நமது கூந்தலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.