செய்திகள்

இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்: தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 47 பேர் கைது

Makkal Kural Official

ராமேஸ்வரம், அக். 9–

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 30 பேர் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியையும், மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது ஆண்டாண்டு காலமாக தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. இந்தநிலையில் ராமேசுவரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்றிரவு தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல, இலங்கையின் நெடுந்தீவு மேற்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 17 பேரையும் நேற்றிரவு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மொத்தம் 47 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

ஒரே நாள் இரவில் 47 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையின் அத்துமீறிய நடவடிக்கையானது, மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *