வாழ்வியல்

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வறுத்த முந்திரிப்பருப்பு


நல்வாழ்வுச் சிந்தனை


முந்திரி, பாதாம் போன்ற உணவுகள் அதிக ஆரோக்கிய சத்துக்களைக் கொண்டவை. எனவே மக்கள் பல்வேறு உணவுகளிலும் பலகாரங்களிலும் இவற்றை சேர்ப்பதைப் பார்க்க முடியும். எனவே முந்திரியும் கூட ஒரு ஆரோக்கியமான உணவாகவே பார்க்கப்படுகிறது.​

முந்திரிப் பருப்புகள் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இவை இரத்த சர்க்கரை அளவில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு பயனளிக்கும் உணவாக முந்திரி உள்ளது

முந்திரி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்தல், இதய ஆரோக்கியம், உடல் எடையைக் குறைத்தல் போன்றவற்றிற்கு முந்திரி உதவுகிறது.

முந்திரி உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளே உடல் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளன. மேலும் இவை பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை உடலில் ஏற்படுத்துகின்றன.

பச்சையாக இருக்கும் முந்திரியை விட வறுத்த முந்திரியானது அதிக ஆக்ஸிஜனேற்ற திறனைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 18 முந்திரிகளை உண்ணலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே தினமும் அதிகமாக முந்திரி உண்பவர்கள் அதைக் கட்டுப்படுத்துவது நல்லது.

முந்திரியில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் உள்ளபோதும் முந்திரி சில சமயங்களில் ஆபத்தை விளைவிக்கலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

​அளவுக்கு அதிகமாக முந்திரியை சாப்பிடும்போது அது ஒவ்வாமை அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். அதிக அளவு முந்திரியை சாப்பிடும்போது அது சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மேலும் நாள்பட்ட உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *