செய்திகள்

இன்று 2-வது நாளாக என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

Makkal Kural Official

நெய்வேலி, செப். 19–

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. என்.எல்.சி. நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.என்.எல்.சி. நிர்வாகம் அந்நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்களுக்கும் 1 லட்சம் முதல் 4 லட்சம் வழங்குவதாகவும் ஆனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றும் சொசைட்டி மற்றும் ஓப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு மாதம் ஊதியமான ரூபாய் 20 ஆயிரம் போனஸ் மட்டுமே என்.எல்.சி. நிர்வாகம் வழங்குகின்றனர்.

இந்நிலையில் என்.எல்.சி.நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க கோரி என்.எல்.சி.ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் சேகர், தலைவர் அந்தோணி தாஸ் தலைமையில் சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓப்பந்த தொழிலாளர்கள் நெய்வேலி கியூ பாலத்தில் இருந்து பேரணியாக என்.எல்.சி.சுரங்க நிர்வாக அலுவலகம் (பீல்டு ஆபீஸ்) நோக்கி சென்றவர்களை போலீசார் வட்டம் 26 தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் எதிரில் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சிறிது நேரம் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து சத்தியாகிரக அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக என்.எல்.சி.நிர்வாகம் தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். நேற்று இரவு விடிய, விடிய போராட்டம் நடைபெற்றது. இன்று 2-வது நாளாக ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை இன்று மதியம் 1 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு என்.எல்.சி. நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்தை முன்னிட்டு நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *