கொழும்பு, ஏப் 5–
‘இந்தியாவில் உள்ள தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்’ என்று கொழும்பில் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் படகுகளை திருப்பி அனுப்பவும் வலியுறுத்தியுள்ளேன் என்று கூறியிருக்கும் பிரதமர் மோடி, மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் இலங்கை அதிபருடன் பேசினேன். மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமானத்தோடு அணுக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்றார்.
ஒப்பந்தங்கள் கையெழுத்து
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவுடன் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று, அதன் நிறைவாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.